போராளிகளே....
சிறைபட்ட உங்களின் பாதங்கள் இம்மாதத்தோடு 15 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இத்தனை ஆண்டுகள் கடந்துவிட்ட பின்பும் 1998 நவம்பர் கலவரத்தில் படுகொலை செய்யப்பட 19 முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லையே..... ?
படுகொலை செய்யப்பட்டவர்கள் சிறுபான்மை இனமான முஸ்லிம்கள் என்பதாலா ?
படுகொலைக்கு நீதி கேட்டு கோவை வீதிகளில் முழக்கமிட்ட ஒரே காரணத்தினால், உன்னை தீவிரவாதி என்று கைது செய்து சிறையில் தள்ளியது காவல் துறை.
நிச்சயமாக நீ ஒரு தீவிரவாதி அல்ல, சமூக போராளி என்பதை நாங்கள் மட்டுமல்ல, உண்மைக்காக போராடும் ஒவ்வொரு இளைஞனும் அறிந்தே வைத்திருக்கின்றான்.
அனுமானத்தின் அடிப்படையிலும் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்த மட்டுமே இன்று நீதிமன்றங்கள் இயங்குகின்றன.
ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை நியாயப்படுத்தவே மீடியாக்கள் இயங்குகின்றன.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தையும், சிறுபான்மை சமுதாயத்தையும் குறி வைத்தே கைது படலங்களை கட்டவிழ்த்து விடுகிறது நம் காவல்துறை.
நேற்றைய செய்தி பழையது, இன்றைய செய்தி புதியது என நாட்களை கூட மெகா சீரியல்களை போல நினைக்கும் மக்கள் மத்தியில்தான் இன்று வரலாறை நினைவூட்ட வேண்டிய அவல நிலை.
உன் விடுதலைக்கு என்றும் கைய்யேந்திடும் அன்பு நெஞ்சங்கள் இன்றும், என்றும் இந்த பூமியில் வாழ்கிறது என்பதை மட்டும் மறந்துவிடாதே. சோர்ந்துவிடாதே, துவண்டுவிடாதே.
உண்மை ஒரு நாள் வெல்லும்....